Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவி அடுத்த ஆண்டு முன்கூட்டியே  வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவி அடுத்த ஆண்டு முன்கூட்டியே வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

மாணவர்களுக்கான Bantuan Awal Persekolahan எனும் பள்ளித் தொடக்க கால நிதி உதவி, அடுத்த ஆண்டு, தற்போது வழங்கப்படும் கால அளவை விட முன்கூட்டியே வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் உறுதி அளித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உதவித் தொகை பள்ளித் தவணை தொடங்கிய முதல் வாரத்தில் வழங்கப்படுவது குறித்து பெற்றோர்களிடமிருந்து வந்த கருத்துகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளித் தேவைகளுக்கான ஆயத்தப் பணிகளை இன்னும் விரைவாகத் தொடங்க ஏதுவாக இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

தற்போது பள்ளி திறக்கப்படும் முதல் வாரத்தில் இந்த தொடக்க நிதி உதவி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. வரும் 2027 ஆம் ஆண்டில் அதற்கு முன்னதாகவே வழங்குவதற்கான கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான தலா 150 ரிங்கிட் நிதி உதவி, வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் முதல் 13-ஆம் தேதிக்குள் பள்ளிகள் வழியாக பணமாக விநியோகிக்கப்படும். இத்திட்டத்திற்காக 2026-ஆம் ஆண்டில் அரசாங்கம் மொத்தம் 800 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெற்றோர்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்