Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை
தற்போதைய செய்திகள்

மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை

Share:

கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ். லீ யில் வீற்றிருக்கும் நாட்டின் தாய்க்கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நாளை ஜுலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி நடை​பெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் 7 ஆவது மகா கும்பாபி​ஷேகத்தையொட்டி தற்போது மண்டலாபிசேகப் பூசை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் நாளை ஞாயிற்றுக்​கிழமை மாலை 3.30 மணிக்கு அபிசேகம்,
மாலை 6.00 மணிக்கு நித்திய பூசை, அதனை தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு நாதஸ்வரக் கச்சேரி மற்றும் நடன நிகழ்சிகள் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு விசேச பூசையினைத் தொடர்ந்து அம்மன் திருவீதியுலா வலம் வருதல். விசேட தீபாராதனையைத் தொடர்ந்து பிரசாதம் மற்றும் காளாஞ்சி வழங்குதல் நிகழ்வு நடைபெறும்.
உபயப் பிரதிநிதிகள் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவரும், உபய நாட்டாண்மையுமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, உபய பிரதிநிதி டத்தோ டி.ராஜ்குமார் மற்றும் உபயப் பிரதிநிதி டத்தோ, கு.செல்வராஜு ஆகியோர் முன்னி​லையில் நடைபெறும் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசையில் அனைவரும் குடும்ப சமேதரராய் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற அழைப்பு ​விடுக்கப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!