கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ். லீ யில் வீற்றிருக்கும் நாட்டின் தாய்க்கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நாளை ஜுலை 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. கடந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் 7 ஆவது மகா கும்பாபிஷேகத்தையொட்டி தற்போது மண்டலாபிசேகப் பூசை நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு அபிசேகம்,
மாலை 6.00 மணிக்கு நித்திய பூசை, அதனை தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு நாதஸ்வரக் கச்சேரி மற்றும் நடன நிகழ்சிகள் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு விசேச பூசையினைத் தொடர்ந்து அம்மன் திருவீதியுலா வலம் வருதல். விசேட தீபாராதனையைத் தொடர்ந்து பிரசாதம் மற்றும் காளாஞ்சி வழங்குதல் நிகழ்வு நடைபெறும்.
உபயப் பிரதிநிதிகள் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவரும், உபய நாட்டாண்மையுமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா, உபய பிரதிநிதி டத்தோ டி.ராஜ்குமார் மற்றும் உபயப் பிரதிநிதி டத்தோ, கு.செல்வராஜு ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் மாசி மக உபயக்காரர்களின் மண்டலாபிசேகப் பூசையில் அனைவரும் குடும்ப சமேதரராய் தவறாது கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


