May 27, 2026
Thisaigal NewsYouTube
மேலும் பலர் கைது செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

மேலும் பலர் கைது செய்யப்படலாம்

Share:

கோலாலம்பூர், டிச. 28-


கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி கோலாலம்பூர், அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. வழித்தடத்தில் பண்டார் தாசேக் எல்.ஆர்.டி. ரயில் நிலையத்தில் இரு வெவ்வேறு கால்பந்தாட்ட ரசிகர்கள் கும்பல்களுக்கு இடையில் நடந்த சண்டை தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைகலப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளிகளை கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் அடையாம் காணப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இதுவரையில் 20 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட எஞ்சியவர்களை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்டவர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளதாக கூறினார்.

எல்.ஆர்.டி. ரயிலில் உள்ள ரசிகர் கும்பலை மற்றொரு கும்பல் தாக்குவதும், கையில் கிடைத்த தட்டுமுட்டுப் பொருட்களை கொண்டு ரயிலின் கண்ணாடியை உடைப்பதும், பெரும் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு