கோலாலம்பூர்,டிச. 23-
நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று பிற்பகல் முதல் வாகனபோக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று டிசம்பர் 23 ஆம் தேதியும், நாளை 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் டோல் கட்டணம் இலவசம் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும், கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாகியுள்ளது.
காராக் நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் MRR2 சாலையில் பிற்பகல் ஒரு மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்திய நிலையில் காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் நாளை செவ்வாய்க்கிழமை மேலும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








