Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மாந்தநேய உதவி-பேரிடர் நிவாரணக் குழு ஒன்று முதல் இரு வாரங்கள் வரை மியன்மாரில் இருக்கும்
தற்போதைய செய்திகள்

மாந்தநேய உதவி-பேரிடர் நிவாரணக் குழு ஒன்று முதல் இரு வாரங்கள் வரை மியன்மாரில் இருக்கும்

Share:

சுபாங் ஜெயா, மார்ச்.30-

மியான்மாருக்கு இன்று அனுப்பப்பட்ட 50 பேர் கொண்ட மாந்தநேய உதவி - பேரிடர் நிவாரணக் குழு, அடுத்த ஏழு முதல் 14 நாட்களுக்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் இருக்கும் என்று துணைப் பிரதமர் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்தார். மியான்மாரில் உள்ள தேவையைப் பொறுத்து உதவிக்கான காலம் நீடிக்கும் என்று அவர் கூறினார். பிற நாடுகளின் குழுக்களும் ஈடுபட்டிருக்கும் தேடல் - மீட்புப் பணியை இந்த உதவி விரைவுபடுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். சுபாங் விமானப்படை தளத்தில் மியான்மார் நிலநடுக்க மாந்தநேய உதவி பயணத் திட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

இந்த குழு இரண்டு ஐந்து டன் லாரிகள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 33 டன் பொருட்களைக் கொண்டுச் செல்கிறது. தேவைக்கேற்ப குழு உறுப்பினர்களின் எந்தவோர் அதிகரிப்பும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்படும். மியான்மாரில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குடும்பத்துடன் ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தை 'தியாகம்' செய்யத் தயாராக இருக்கும் குழு உறுப்பினர்களுக்கு அரசாங்கம் கூடுதல் சலுகைகளைப் பரிசீலிக்கும் என்று ஸாஹிட் மேலும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்