Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மண்ணுக்கு அடியில் போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

மண்ணுக்கு அடியில் போதைப்பொருள்

Share:

போலீசார்களிடமிருந்து சிக்காமலிருப்பதற்காக, சபா, தன்டேக்கில்ல் உள்ள ஒரு நெல் வயலின் ஆற்றின் கரையில், ஷாபு வகை போதைப்பொருளை புதைத்து வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முந்தினம் பிற்பகல் 3 மணியளவில், கோத்தா மேருடு மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், 46 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதெண்டன் ஸைரோல் நிஸால் இஷாக் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையில், 49 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்புள்ள 1,509 கிராம் ஷாபு வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஸைரோல் நிஸால் குறிப்பிட்டார்.

Related News