Nov 18, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு பாலத்தில் விழுந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பினாங்கு பாலத்தில் விழுந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.18-

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பினாங்கு பாலத்தில் கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

25 வயது எல்மி நூர் ஸமானி என்ற அந்த நபரின் உடல், காலை 9.50 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அந்த ஆடவரின் மனைவி நூருல் நடாஷா தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக தனது கணவரின் உடல், பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பாலத்தின் 2.8 கிலோமீட்டரில் ஆடவர் ஒருவர் கடலில் விழுந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அந்த நபர், கடலில் விழுவதற்கு முன்னதாக பினாங்கு பாலத்தின் ஓரத்தில் தனது யமாஹா மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கைப்பேசி மற்றும் துணிப்பை ஒன்றைக் கைவிட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.

Related News

கெந்திங் மலை சாலைக்குக் கட்டண விதிப்பு: உத்தேச பரிந்துரை இன்னும் பெறப்படவில்லை

கெந்திங் மலை சாலைக்குக் கட்டண விதிப்பு: உத்தேச பரிந்துரை இன்னும் பெறப்படவில்லை

போலீசாரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறார் தேவித்ரா

போலீசாரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகிறார் தேவித்ரா

டச்சு  மாடல் அழகியின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும் உத்தரவை  ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி

டச்சு மாடல் அழகியின் தாயாருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும் உத்தரவை ஒத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி

தொலைத் தொடர்பு மற்றும் இணைய பாதுகாப்பில் இந்தியா, ஈரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த மலேசியா திட்டம்

தொலைத் தொடர்பு மற்றும் இணைய பாதுகாப்பில் இந்தியா, ஈரானின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த மலேசியா திட்டம்

மலேசிய சிறைகளில் 84,000-த்திற்கும் மேற்பட்ட கைதிகள் – அதிகபட்ச எண்ணிக்கையைக் கடந்தது

மலேசிய சிறைகளில் 84,000-த்திற்கும் மேற்பட்ட கைதிகள் – அதிகபட்ச எண்ணிக்கையைக் கடந்தது

கள்ளத் தோணி கவிழ்ந்த சம்பவம்: தேடும் பணியை நிறுத்திக் கொண்டது மலேசியா

கள்ளத் தோணி கவிழ்ந்த சம்பவம்: தேடும் பணியை நிறுத்திக் கொண்டது மலேசியா