Mar 14, 2026
Thisaigal NewsYouTube
e-hailing ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

e-hailing ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

சீன நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை மடக்கு நாற்காலியினால் அடித்து, காயம் விளைவித்ததாக e-hailing ஓட்டுநர் ஒருவர், இன்று குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த பல்கலைக்கழக மாணவி காரின் கதவை வேகமாக சாத்தினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த ஒரு மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய முஹமாட் சிடெக் சாலெ என்ற 32 வயதுடைய அந்த கார் ஓட்டுநர், அந்த மாணவியை சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 16 ம் தேதி மாலை 6.20 மணியளவில் குவந்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் அந்த வாகன ஓட்டுநர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து, அந்த வாகன ஓட்டுநர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து