சீன நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை மடக்கு நாற்காலியினால் அடித்து, காயம் விளைவித்ததாக e-hailing ஓட்டுநர் ஒருவர், இன்று குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த பல்கலைக்கழக மாணவி காரின் கதவை வேகமாக சாத்தினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த ஒரு மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய முஹமாட் சிடெக் சாலெ என்ற 32 வயதுடைய அந்த கார் ஓட்டுநர், அந்த மாணவியை சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 16 ம் தேதி மாலை 6.20 மணியளவில் குவந்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பு அறையில் அந்த வாகன ஓட்டுநர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து, அந்த வாகன ஓட்டுநர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








