Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சொஸ்மா கைதிகள் போலீஸ் புகார் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.25-

சுங்கை பூலோ சிறைச்சாலையில் தாங்கள் சித்ரவதைக்கு ஆளாகியதாக சொஸ்மா கைதிகள் தெரிவித்துள்ள புகார் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்படுவதற்கு அவர்கள், தங்கள் வழக்கறிஞர்களுடன் போலீஸ் நிலையத்திற்கு செல்ல சிறைச்சாலை இலாகா அனுமதிக்க வேண்டும் என்று சொஸ்மா கைதிகளை பிரதிநிதிக்கும் இரண்டு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

சொஸ்மா கைதிகளை முன்நிறுத்தியே இப்போலீஸ் புகார்கள் செய்யப்படவிருப்பதால் வழக்கறிஞர்களுடன் சொஸ்மா கைதிகள், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.

கடந்த வாரம், 32 சொஸ்மா கைதிகள் மீதான வழக்கு விசாரணை கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, சுங்கைப் பூலோ சிறைச்சாலையில் தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாக நீதிபதியிடம் அவர்கள் நேரடியாக புகார் அளித்து இருப்பதை வழக்கறிஞர் ராஜேஸ் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில் இது தொடர்பில் போலீசில் புகார் செய்யும்படி கைதிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியிருப்பதையும் ராஜேஸ் விளக்கினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு