பகாங், பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி குறித்து முடிவு செய்வதற்கு தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் வரும் வியாழக்கிழமை தனது சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
பெலாங்காய் சட்டமன்றத் தொகுதி காலியாகிவிட்டது குறித்து பகாங் மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஸ்ரீ முகமட் ஷர்கார் ஷம்சுதீன் னிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாங்கள் பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மைருடின் இஷாக் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை சிலாங்கூர், சுங்கை பூலோ அருகில் எல்மினாவில் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி ஹாருன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


