Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரப்பர் தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்தது - இருவர் பலி, மேலும் எழுவர் படுகாயம்

Share:

தங்காக், பிப்.25-

ஜோகூர், தங்காக்கில் ரப்பர் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் எழுவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. ரப்பர் பதப்படுத்தப்படும் அந்த தொழிற்சாலையில் உள்ள ஐந்து இயந்திரங்களில் ஒன்றில் தொழிலாளர்கள், பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் வெடித்தது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் மொத்தம் ஒன்பது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மாண்டனர். கடும் காயங்களுக்கு ஆளான 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் தொழிலாளர் தங்காக் மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

மற்றொருவர், ஆபத்தான நிலையில் மூவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக ரோஸ்லான் முகமட் தாலிப் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு