Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட்டைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் அனுவார் யுனுஸ் ஆகியோருடன் தொடர்புடைய 169 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் பறிமுதல் செய்ய அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இப்பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து இஸ்மாயிலோ அல்லது அனுவாரோ நீதிமன்றத்தை அணுகாததால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பறிமுதல் கோரிக்கைக்கு அனுமதி அளிப்பதாக நீதிபதி சுஸானா ஹுசேன் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் இது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும் கூட, எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் அந்நிதியைக் கோர முன்வரவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 41(1) இன் கீழ் எஸ்பிஆர்எம்மின் பறிமுதல் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்