Jun 29, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.04-

அரசாங்கம் அமல்படுத்திய முற்போக்கு சம்பள முறையில் கடந்த நவம்பர் மாதம் வரை 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றுள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

இந்த 32 ஆயிரம் தொழிலாளர்களும் 16 விழுக்காடு வரை சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

முற்போக்கு சம்பள முறையை அரசாங்கம் பரீட்சார்த்த முறையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழிலாளர்கள் பங்குப் பெற்றுள்ளார்.

தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வு அனுகூலத்தின் வாயிலாக மொத்தம் 34 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் அமைச்சர் ஸ்டீவன் சிம், தெரிவித்தார்.

சம்பள உயர்வைப் பெற்ற அனைத்து தொழிலாளர்களும், இந்த ஊக்கத் தொகைக்கான தகுதியைப் பெறுவதற்கு நிபந்தனைகளில் ஒன்றாக அவர்கள் வருடத்திற்கு 21 மணி நேரம் பயிற்சி பெற வேண்டும் அல்லது முன் அடைவு நிலைக்கான அங்கீகாரம் மூலம் குறைந்தபட்ச பயிற்சியாவது பெற வேண்டும் என்று அமைச்சர் ஸ்டீவன் லிம் விளக்கினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு