Mar 25, 2026
Thisaigal NewsYouTube
இவானா ஸ்மிட் மரணம் மீதான வழக்கு 18 நாட்களுக்கு நடைபெறும்
தற்போதைய செய்திகள்

இவானா ஸ்மிட் மரணம் மீதான வழக்கு 18 நாட்களுக்கு நடைபெறும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 05-

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி இவானா எஸ்தர் ராபர்ட் ஸ்மிட் மரணம் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் மற்றும் இதர மூன்று தரப்பினருக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விசாரணை தேதியை அறிவித்துள்ளது.

19 வயதுடைய அந்த டச்சுக்காரப் பெண், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர், Persiaran Capsquare, City Centre – லில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 20 ஆவது மாடியிலியிலிருந்து 6 ஆவது மாடியில் கீழே விழுந்து, நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது ஒரு விபத்து என்று மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும் அந்த தீர்ப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அந்த இளம் பெண் மரணம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்வதற்கு ஓர் உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டத்துறை அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த மாடல் அழகியின் தாயார் கிறிஸ்டினா கரோலின், தமது மகளின் மரணம் தொடர்பான விசாரணையில் போலீஸ் துறை தனது கடமையை செய்யத் தவறிவிட்டது என்று கூறி, போலீஸ் படைத் தலைவர், மலேசிய அரசாங்கம் உட்பட மூன்று தரப்பினருக்கு எதிராக இந்த சிவில் வழக்கை தொடுத்துள்ளார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது