ஜோகூர் மாநிலம் தங்காக் பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், டிக் டாக்கிக் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி 2 லட்சத்து 45 ஆயிரத்து 403 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.
குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறிய மோசடிக் கும்பலிடம் சிக்கி அவர் தமது சேமிப்புத் தொகையை இழந்துள்ளார்.
மோசடி கும்பல் கூறியதை நம்பிய அவர், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 முறை பணம் அனுப்பியதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக தேசிய மோசடி தடுப்பு நடவடிக்கை மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.








