Aug 9, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியைச் சந்தேகப் பேர்வழி என்று எவ்வாறு வகைப்படுத்த முடியும்?
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியைச் சந்தேகப் பேர்வழி என்று எவ்வாறு வகைப்படுத்த முடியும்?

Share:

கோலாலம்பூர், மார்ச்.17-

ஒரு வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் எடுக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவாத நிலையில் அவரை எவ்வாறு சந்தேக நபர் என்று வகைப்படுத்த முடியும் என்று பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யும் சட்ட வல்லுநருமான ஹாசான் அப்துல் கரீம் கேள்வி எழுப்பினார்.

ஒரு சமயத்தில் மலேசிய ஊழல் தடுப்பு நடவடிக்கைக் குழுவின் ஓர் உறுப்பினராக மாமன்னரால் தாம் நியமிக்கப்பட்டத்காகவும், அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இஸ்மாயில் சப்ரி விவகாரத்தில் நடப்பது அனைத்து விநோதமாக இருக்கிறது என்று ஹசான் கரீம் குறிப்பிட்டார்.

ஒருவர் விசாரணையில் இருக்கும் பட்சத்தில் அவரை எவ்வாறு சந்தேக நபர் என்று வகைப்படுத்த முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இஸ்மாயில் சப்ரியை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு சட்டத்துறை அலுவலகம் எந்தவோர் உத்தவையும் பிறப்பிக்கவில்லை. அவர் இன்னும் கைது செய்யப்படவும் இல்லை. ஆனால், விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கானப் பணத்தை மட்டும் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் அடிக்கடி காட்டப்படுவதற்கான நோக்கம்தான் என்ன என்று ஹசான் கரீம் வினவியுள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து