May 6, 2026
Thisaigal NewsYouTube
மைகாட் அல்லது பிறப்புப் பத்திரத்தில் பெயர்களைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

மைகாட் அல்லது பிறப்புப் பத்திரத்தில் பெயர்களைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி

Share:

பாச்சோக், டிசம்பர்.12-

மலேசியர்கள் தங்கள் மைகாட் அட்டை அல்லது பிறப்புப் பத்திரத்தில் தேவையானத் திருத்தங்கள் அல்லது பெயருடன் சேர்த்து பெற்ற விருதுகளை இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய தேசிய பதிவு துறையான ஜேபிஎன் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மலேசியர்கள் தங்கள் அடையாள ஆவணங்களில் இத்தகையத் திருத்தங்களைச் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அகியாஸ் தெரிவித்தார்.

தேசியப் பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்கள் நிலையானவை அல்ல என்பதை பலர் உணர்ந்து இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நடப்புத் தேவைகளுக்கு ஏற்ப தங்களின் பெயர்களில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும் புதுப்பிக்கப்படுவதற்கும் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.

முன்பு அத்தகைய நிலைமை இருந்ததில்லை. காரணம் கடந்த கால பதிவுகள் முற்றிலும் வித்தியாசமானதாகும். அந்த நேரத்தில் தேசிய பதிவு இலாகாவில் பெயர்களைப் பதிவுச் செய்து கொள்பவர்கள் முழுமையான ஆவணங்கள் வழங்குவதில்லை. இதன் விளைவாக அடையாள ஆவணங்களில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது ஆவணங்கள் அனைத்தும் முழுவதும் விவரங்களை உள்ளடக்கியிருப்பதால் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று டத்தோ பட்ருல் ஹிஷாம் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்