கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழகமான ஐ.ஜே.எனில் மிக கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகாலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சென்று கண்டார்.
சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுல்கிப்ளி அமாட்- டுன் ஐ.ஜே.என்- னுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு டத்தோ முத்தாங் தகா- லின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
டத்தோ முத்தாங் தகால், உடல் நலம் தேற, இறைவனை பிரார்த்திப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அஜர்பைஜான்- நாட்டிற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டிருந்த டத்தோ முத்தாங் தகால், திடீரென்று சுகவீனப்பட்டதைத் தொடர்ந்து அலுவல் பயணத்தை தொடரமுடியாமல் அவசரமாக நாடு திரும்பிய நிலையில் ஐ.ஜே.என்- னில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.








