Feb 23, 2026
Thisaigal NewsYouTube
ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாமல் இருப்பது அரசியல் ரீதியாக ஆபத்து - முன்னாள் துணையமைச்சர் கருத்து
தற்போதைய செய்திகள்

ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாமல் இருப்பது அரசியல் ரீதியாக ஆபத்து - முன்னாள் துணையமைச்சர் கருத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.23-

பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யை மீண்டும் அறிமுகப்படுத்தாமல் இருப்பது, அதனை மீண்டும் செயல்படுத்துவதை விட, அதிக அரசியல் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் முன்னாள் துணையமைச்சர் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி-யை மீண்டும் அமல்படுத்தாவிட்டால், அரசாங்கம் பிற வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது விரிவுபடுத்தவோ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

டெய்லர் பல்கலைக்கழகத்தில் தற்போது துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் ஓங், தற்போதைய அரசாங்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை ஆதரித்த கூட்டணிக் கட்சிக்காரர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு பாரிசான் நேஷனல் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி பகிரங்கமாக ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக அது சாத்தியமே என்றும் ஓங் கியான் மிங் விளக்கமளித்துள்ளார்.

Related News

மலேசியாவில் நிபா வைரஸ் தொற்று பதிவாகவில்லை: தீவிர கண்காணிப்புகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதாக DVS அறிவிப்பு

மலேசியாவில் நிபா வைரஸ் தொற்று பதிவாகவில்லை: தீவிர கண்காணிப்புகளும், தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்வதாக DVS அறிவிப்பு

சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

சபா வெள்ளம்: 4000-த்திற்கும் அதிகமானோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஜசெக சிறப்பு மாநாடு: உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன

ஜசெக சிறப்பு மாநாடு: உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துகளும், விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன

பினாங்கு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் இறந்து கிடந்தார்

பினாங்கு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் இறந்து கிடந்தார்

8 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி: முன்னாள் டெல்கோ இயக்குநர் கைது

8 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி: முன்னாள் டெல்கோ இயக்குநர் கைது

சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

சபாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை