May 27, 2026
Thisaigal NewsYouTube
கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
தற்போதைய செய்திகள்

கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்

Share:

ஜன. 8-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக்காவல் குறித்த கூடுதல் உத்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறைத் தலைவர் Dusuki Mokhtar கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். நஜிப்பின் வழக்கறிஞர் Shafee Abdullah, இந்த உத்தரவு அரண்மனையிலிருந்து அப்போதைய சட்டத்துறைத் தலைவர் Ahmad Terrirudin Salleh வுக்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். நஜிப், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளார்.

நஜிப் இந்த உத்தரவின் இருப்பை உறுதி செய்ய பல அதிகாரிகளுக்கு எழுதியும் பதில் பெறவில்லை என்று நீதிபதி Firuz Jaffril கூறினார். மேலும், பகாங் சுல்தானிடமிருந்து இந்த உத்தரவின் நகலைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார். நஜிப்பின் சிறைத்தண்டனையும் அபராதமும் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Related News