கோலாலம்பூர், அக்டோபர் 07-
ஆசியானின் 44 மற்றும் 45 ஆவது உச்சநிலை மாநாடு, நாளை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குகிறது. Laos தலைநகர் Vientiane- னில் நடைபெறும் இந்த உச்ச நிலை மாநாட்டில் மலேசியாவிலிருந்து மிகப்பெரிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவிருக்கிறார்.
டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றங்கள், தென்சீனா கடலில் நிலவும் பதற்ற நிலை, மியன்மார் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசிய ஆராயும் ஒரு களமாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.
இந்த மாநாட்டில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு தென் சீனா கடல் விவகாரத்தில் மலேசியா உறுதியான நிலைபாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Laos –ஸிற்கான மலேசியத் தூதர் எடி இர்வான் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.








