May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கை: 174 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கை: 174 பேர் கைது

Share:

ஜோகூர்பாரு, நவ. 26-


ஜோகூர் மாநிலத்தில் ஒழுங்கீன நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியாக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஜோகூர்பாருவிலும், பத்து பஹாட்டிலும் உள்ள 16 வளாகங்களில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கேளிக்கை மையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 174 பேரில் உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது ஆடவர்களும், மூன்று பெண்களும் அடங்குவர்.
தவிர வியட்நாம், மியன்மார், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் முதலிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 133 அந்நியப் பெண்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். முறையே, 93 வியட்நாம் பெண்கள், 22 தாய்லாந்துப் பெண்கள், நான்கு மியன்மார் பெண்கள், 3 இந்தோனேசியப் பெண்கள், 5 லாவோஸ் நாட்டுப் பெண்கள், 6 சீன நாட்டுப்பெண்கள் என்று கமிஷனர் டத்தோ குமார் பட்டியலிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு