Mar 24, 2026
Thisaigal NewsYouTube
காரில் பெட்ரோல் பதுக்கல்; தம்பதியர் கைது
தற்போதைய செய்திகள்

காரில் பெட்ரோல் பதுக்கல்; தம்பதியர் கைது

Share:

கிளாந்தான், ஜூலை 10-

கிளாந்தான், தும்பாட், கம்போங் தூசுன் லாங்கர் எனுமிடத்தில், காரில் 75 லிட்டர் பெட்ரோலை கடத்த முற்பட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலத்திற்கான உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன மீதான அமைச்சு நேற்று காலை மணி 11 அளவில், மேற்கொண்ட சோதணையின் போது, அவ்விருவரும் PERODUA KENARI வாகனத்தில், சந்தேகத்திற்குரிய வகையில் பெட்ரோலை நிரப்பியுள்ளனர்.

அவர்களை பிந்தொடந்து சென்று வாகனத்தை சோதணையிட்ட போது, மாற்றியமைப்பட்ட பெட்ரோலுக்கான கொள்கலனில், அவ்விருவரும் பெட்ரோலை நிரப்பியுள்ளதும் அண்டை நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் அவை கொண்டு செல்லப்படவிருந்ததும் கண்டறியப்பட்டது.

Related News