May 27, 2026
Thisaigal NewsYouTube
10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜன.8


தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி சோதனையில் அமர்வதற்கு பத்தாயிரம் மாணவர்கள் தவறிவிட்டனர் என்ற தரவை அனைத்து தரப்பினரும் தவறாக கையாள வேண்டாம் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்.பி.எம். தேர்வில் அமராமல் போன மாணவர்களின் எண்ணிக்கை மிக உயர்வானது என்பதை என்.யு.டி.பி. ஒப்புக்கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் பவுஸி சைகோன் தெரிவித்தார்.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். இதில் முதன்மை காரணம் அந்த மாணவர்களுக்கு சிறு வயது முதல் மாணவர்கள் மற்
றும் பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். கல்வியின் அடுத்த படிநிலைக்கு செல்ல எஸ்.பி.எம். தேர்வு பற்றி அந்த மாணவர்களும் அறியாமல் இருந்து இருக்கலாம் என்று பவுஸி சைகோன்
குறிப்பிட்டுள்ளார்.

Related News