எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் மலேசிய பொது தற்காப்புப் படையின் கெடா மாநில இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் தாகோப் மரணம் அடைந்தார். 56 வயதான அவாங், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி 12.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிப்பதற்கு இன்னும் 20 நிமிடமே எஞ்சியுள்ள வேளையில் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை கடந்த நிலையில் அவாங் மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினர், அவாங்கை அந்த சிகரத்திலிருந்து நான்காவது முகாமிற்கு கொண்டு வந்து, அவசர சிகிச்சை உதவியை வழங்கிய போது அவர் இறந்து விட்டது உறுதிபடுத்தப்பட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


