Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதப்படை  உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

ஆயுதப்படை உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.19-

மலேசிய ஆயுதப்படை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 'Ops Parasit' மற்றும் 'Ops Star' நடவடிக்கைகள் குறித்த விசாரணை அறிக்கையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்தது.

மேல் நடவடிக்கை மற்றும் அடுத்தக் கட்ட உத்தரவுகளுக்காக இந்த விசாரணை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் குறித்த பரிந்துரைகளையும் எஸ்பிஆர்எம் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்த அடுத்தக் கட்ட முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் கொள்முதல் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான விசாரணையில், இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் நான்கு மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 23 பேரை எஸ்பிஆர்எம் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு