கோலாலம்பூர், ஜன - 9
மலேசிய தேசிய செய்தி நிறுவனமான (Bernama) பணியாளர் ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்தை விளைவித்ததாக சந்தேகிக்கும் நபரை போலீசார் கைது செய்தனர்.
25 வயதுடைய ஆடவன் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதால் ஒருநாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக பெத்தாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட்ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
சோதனையில் அவ்வாடவன் அதிகளவில் மது எடுத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.
பெர்னாமா டிவி ஒளிபரப்பு தொழில்நுட்ப நிர்வாகியான முஹமாட் சைஃபுடின் முஹமாட் நசாரி சைஃபுடின் முஹமாட் நசாரி முஹமாட் நசாரிவேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் இச்சம்பவம் நடந்ததாகவும் யுனிவெர்சிட்டி மலாயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முஹமாட் ஃபக்ருடின் அறிவித்தார்.








