Jul 4, 2026
Thisaigal NewsYouTube
5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை
தற்போதைய செய்திகள்

5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.20-

அண்மையில் பெட்டாலிங் ஜெயாவில் SS2இல் தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் 5 போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது .

அந்த ஐவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில் அந்த ஐவரையும் விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கு போலீசார் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்து இருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெறும் வரையில் ஐவருக்கும் பணித்தன்மை மாற்றப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜுலை 7 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, SS2இல் சாலைத் தடுப்புச் சோதனையை மேற்கொண்ட போது, தன்னை கைது செய்த போலீஸ்காரர்கள், மிரட்டிப் பணம் பறித்ததாக அந்த தைவான் நாட்டுப் பெண், சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது