நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவியிருந்த காலகட்டத்தில் அதனை தடுப்பதிலும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, தமது பெயரை மூலிகை மருந்து விளம்பரத்தில் இடம் பெறச் செய்து இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த மூலிகை மருந்து தயாரிப்பில் தாம் சம்பப்படாத பட்சத்தில், அது தொடர்பான விளம்பரத்தில் தமது பெயரை சம்பந்தப்பட்டுள்ளது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த முன்னாள் டிஜி ( DG ) அறிவித்துள்ளார்.
கூங் வோ தொங் என்ற சீன பாரம்பரிய மூலிகை மருந்துப் பொருட்கள் விற்பனை நிறுவனம், ஒரு விளம்பரத்தில் தமது பெயரையும், தமது படத்தையும் தொடர்புபடுத்தியுள்ளதாக டாக்டர் நூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.








