பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உச்சரிக்கும் ரஹ்மா கோட்பாடு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் சிந்தனையில் உருவானது என்று கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் மட்சேர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆனால், ரஹ்மா கோட்பாடு, பிரதமர் அன்வாரின் சிந்தனையில் உருவானதைப் போல தற்போது சித்தரிக்கப்பட்டுவருவதாக மட்சேர் இப்ராஹிம் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றப் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி, சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான அல் குர்ஹான் ஓதும் போட்டியின் போது, துன் மகாதீர் தமது உரையில் ரஹ்மா கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதாக மட்சேர் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


