பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உச்சரிக்கும் ரஹ்மா கோட்பாடு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் சிந்தனையில் உருவானது என்று கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் மட்சேர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆனால், ரஹ்மா கோட்பாடு, பிரதமர் அன்வாரின் சிந்தனையில் உருவானதைப் போல தற்போது சித்தரிக்கப்பட்டுவருவதாக மட்சேர் இப்ராஹிம் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றப் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி, சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான அல் குர்ஹான் ஓதும் போட்டியின் போது, துன் மகாதீர் தமது உரையில் ரஹ்மா கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதாக மட்சேர் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


