Jan 20, 2026
Thisaigal NewsYouTube
வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது

Share:

சொகுசு அடுக்குமாடி ஒன்றின் முன் அமைந்துள்ள கடைக்கு, வெடி மருந்தை வைத்ததுடன் அதை வெடிக்க செய்த 5 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிவிசி நெகிழி குழாய் கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அந்த வெடிக்குண்டை தயாரிக்க அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பிரிக்பீட்ஸ் வட்டார போலீஸ் தலைவர் எ.சி.பி. அமிஹிசாம் அப்துல் சுகோர் தெரிவித்தார்.

35 வயது முதல் 60 வயது மதிக்கத்தக்க அந்த ஐவரும் வெடி மருந்தை கடையில் வைத்த நிழல் காட்சி ரகசிய கேமராவில பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுவர் என அப்துல் சுகோர் கூறினார்.

காலை 6.00 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள பாதுகாவலர் போலீசாருக்குத் தகவல் தந்ததாகவும், இது தொடர்பாக தீயணைப்பு குழுவினர் நடத்திய விசாரணையில் அங்கு வெடித்த சம்பவம் நடந்த அடையாளங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்