Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசிய கினி நிருபர் நந்தகுமார் ஜாமீனில் விடுவிப்பு

Share:

புத்ராஜெயா, மார்ச்.04-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எமால் கைது செய்யப்பட்ட மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஷா ஆலாமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அந்நியத் தொழிலாளர் முகவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நந்தகுமார், இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமை அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நந்தகுமாருக்கு விதிக்கப்பட்ட பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் பணத்தை, மலேசிய கினியின் நிர்வாக ஆசிரியர் RK ஆனந்த் செலுத்தினார். உடன் நத்தகுமாரின் மனைவியும் காணப்பட்டார்.

பாகிஸ்தான் ஏஜெண்டுடன் கூட்டாகச் சேர்ந்து அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து மலேசிய கினியில் செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கொடுக்குமாறு அந்த நிருபர், பேரம் பேசியதாகவும், பின்னர் 20 ஆயிரம் வெள்ளியை லஞ்சப் பணமாகப் பெற்றதாகவும் எஸ்பிஆர்எம் தெரிவித்து இருந்தது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு