கோலாலம்பூர், ஜூலை 9-
ஆறாம் படிவ மாணவர்களுக்கு வாழ்க்சை செலவின படித்தொகையாக, அலவன்ஸ் தொகையை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.
ஆறாம் படிவ கல்வித் திட்டத்தில் அதிகமான மாணவர்கள் இணைவதை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக அலவன்ஸ் தொகை வழங்கப்படுவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக துணை அமைச்சர் விளக்கினார்.
இதே போன்று ஆறாம் படிவ மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் மூத்த ஆசிரியர்களுக்கும் அலவன்ஸ் தொகை வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வாங் கா வோ இதனை தெரிவித்தார்.








