பினாங்கு, ஜார்ஜ் டவுன் வட்டாரத்தில் நடமாடி வரும் போலீ சாமியார்களிடம் பணம் அல்லது பொருள்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது மக்களுக்கு இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட அந்த போலீ சாமியார்கள், ஜார்ஜ்டவுனின் 12 வியூகம் நிறைந்த பகுதிகளில் நின்று கொண்டு பொது மக்களிடம் நன்கொடை கோருவதாக பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர் Tan Soo Siang தெரிவித்துள்ளார்.
அந்த போலீ சாமியர்களின் இத்தகைய ஏமாற்று வேலைகளை முறியடிப்பதற்கு சில தொண்டு அமைப்புகளுடன் பினாங்கு மாநகர் மன்றம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








