May 23, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா – உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பு துரிதப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மலேசியா – உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பு துரிதப்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

முன்னாள் சோவியத் குடியரசு நாடான உஸ்பெகிஸ்தான் – னுடன் மலேசியா பல்வேறு துறைகளில் தனது ஒத்துழைப்பை துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அந்த மத்திய ஆசிய நாட்டுடன் மலேசியா ஒத்துழைப்பு கொள்வதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று மதியம், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் Shavkat Mirziyoyew-வுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடலில் டத்தேஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.

Related News