May 26, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைச் சம்பவம் : ஒருவன் இறந்து கிடந்தான்
தற்போதைய செய்திகள்

கொள்ளைச் சம்பவம் : ஒருவன் இறந்து கிடந்தான்

Share:

குளுவாங், நவ.16-


ஜோகூர், குளுவாங், ஜாலான் லக்சமணா, சன்ரைஸ் பார்க்கில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, கொள்ளையர்களில் ஒருவன் கடும் காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஒருவன், இன்னமும் தலைமறைவாக உள்ளான் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் நிக் முகமட் அஸ்மி ஹுசேன் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசி நேற்று இரவு 7.12 மணியளவில் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இறந்து கிடந்த நபருக்கு வலது கரத்தில் ஏற்பட்ட கடும் காயத்தினால் தப்பிக்க இயலாமல், உடலிருந்து அதிகமான ரத்தம் வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இரும்பினால் அல்லது கூர்மையான ஆயுத்தினால் அந்த நபருக்கு காயம் உண்டு பண்ணியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது