கோலாலம்பூர், நவ.6-
மனித அமைச்சின் கீழ் உள்ள மனித வள மேம்பாட்டு வாரியமான எச்.ஆர்.டி. கோர்ப்-- பை விசாரணைக்காக தேசிய கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி. மீண்டும் அழைத்துள்ளது.
இதற்கு முன்பு பி.ஏ.சி. முன்மொழிந்த பரிந்துரைகளின் தொடர் நடவடிக்கை குறித்து விளக்கம் பெறுவதற்கு மனித வள மேம்பாட்டு வாரியம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக்குழுவின் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடீன் தெரிவித்துள்ளார்.
எச்.ஆர்.டி. கோர்ப்-வுடனான பி.ஏ.சி. யின் தொடர்நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி எச்.ஆர்.டி. கோர்ப் பொறுப்பாளர்கள் அழைக்கப்படுவர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.








