May 20, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், நபர் மீது குற்றச்சாட்டு

Share:

தற்காலிக நிவாரண மையத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வேலையற்ற நபர் ஒருவர், கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

61 வயதுடைய முஹமாட் ரஷிட் ரஹ்மாட் என்ற அந்த நபர், கடந்த நவம்பர் 22 ஆம் தேதி இரவு 8 மணியளவில் குவாலா நெராங் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி, நிவாரண மையமாக மாற்றப்பட்ட நிலையில் அந்த மையத்தில் தங்கியிருந்த 7 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News