தற்காலிக நிவாரண மையத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வேலையற்ற நபர் ஒருவர், கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
61 வயதுடைய முஹமாட் ரஷிட் ரஹ்மாட் என்ற அந்த நபர், கடந்த நவம்பர் 22 ஆம் தேதி இரவு 8 மணியளவில் குவாலா நெராங் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி, நிவாரண மையமாக மாற்றப்பட்ட நிலையில் அந்த மையத்தில் தங்கியிருந்த 7 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








