Aug 1, 2026
Thisaigal NewsYouTube
மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு
தற்போதைய செய்திகள்

மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-

மகாத்மா காந்தியின் பேரனும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்மோகன் காந்தியுடன், தாம் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆசிய ஜனநாயக மாநாட்டில் ராஜ்மோகன் காந்தியை சந்தித்த நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும் அன்வார் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது மலேசியா–இந்தியா இடையேயான வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது, கல்வி மற்றும் அறிவுசார் ஒத்துழைப்பு, நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு, முதல் காலாண்டில் மலேசியாவுக்கு வருமாறு ராஜ்மோகன் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஜனநாயகம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவம் போன்ற தலைப்புகளில் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் உரையாற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அன்வார் விவரித்துள்ளார்.

அதேவேளையில், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

பிரிக்பீல்ட்ஸ் Q Sentral கட்டடத்தின் 33-ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் உயிர் தப்பினார்

RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

RXZ Members 8.0 பேரணிக்குச் செல்லும் வழியில் 3 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலி

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK