May 27, 2026
Thisaigal NewsYouTube
தாயும், சேயும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

தாயும், சேயும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தனர்

Share:

கூலாய், ஜன.8-


தொப்புக்கொடி அவிழ்க்கப்படாத நிலையில் சிசுவும், அவரின் தாயார் என்று நம்பப்படும் பெண்ணும் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.15 மணியளவில் பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து ஜோகூர், கூலாய், தாமான் இம்பியானா, ஜாலான் இம்பியானாவில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்திற்கு செல்லும் பாதையில் தாயும், சேயும் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.

அவ்விருவரின் உடலிலும் எவ்வித காயமும் காணப்படவில்லை. அந்நிய நாட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தப் பெண் மற்றும் சிசுவின் சடலங்கள், சவப்பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏசிபி டான் செங் குறிப்பிட்டார்.

Related News