Apr 2, 2026
Thisaigal NewsYouTube
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படாதது ஏன்?
தற்போதைய செய்திகள்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படாதது ஏன்?

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில சர்ச்சையைத் தீர்ப்பதற்கு ஜாகேல் டிரேடிங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், இவ்விவகாரத்தைத் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாதது ஏன் என்பதற்கு கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸாலேஹா முஸ்தபா இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நில சர்ச்சையைத் தீர்ப்பதற்கு இவ்விவகாரம், நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு இருக்குமானால், அதற்கு தீர்வு காண்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

இந்நிலையில் கோவில் வீற்றிருக்கும் ஜாகேல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மடானி பள்ளிவாசலை வெகு சீக்கிரமாக கட்டும் முயற்சியில் சுணக்கம் ஏற்படும் என்பதால் இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படவில்லை என்று அமைச்சர் டாக்டர் ஸாலேஹா தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு இருக்குமானால் நிச்சயம், மடானி பள்ளிவாசலை இப்போதைக்குக் கட்ட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் டாக்டர் ஸாலேஹாவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த விவகாரத்தைத் தாங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லவில்லை என்று ஆலய நிலத்தை விலைக்கு வாங்கிய ஜாகேல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் பாஃரோஸ் முகமட் ஜாகேல் கூறியிருப்பது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அதே வேளையில், இந்த விவகாரத்தை நல்லிணக்க முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தாங்கள் கொண்டிருந்த அணுகுமுறையும், நீதிமன்றத்திற்குச் செல்ல வழிவிடவில்லை என்று பாஃரோஸ் முகமட் விளக்கம் அளித்து இருந்தார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்