சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அருகே உள்ள ஜாலான் குவால சிலாங்கூரில் டிரெய்லர் ஒன்றை கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பேசிய சிலாங்கூர் மாநில தீயணைப்பு 0 மீட்புப் படையின் துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிசஸ் முக்தார் கூறுகயில், காலை 5.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து விப்த்தில் சிக்குண்ட காரோட்டியை மீட்கும் பணியில் இறங்கியதாக அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
பெரோடுவா அக்சியா வகை காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞர் எதிரே வந்த டிரெய்லரை மோதியதால் சம்பவ இடத்திலேயே மாண்டார் என அவர் மேலும் சொன்னார்.








