Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் காயம்

Share:

ஜோகூர்பாரு, பிப்.8-

ஜோகூர்பாரு, ஜாலான் கெம்பாஸ் பாருவில் உள்ள சமிக்ஞை விளக்குப்பகுதியில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணியளவில் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.

இந்த விபத்து, 33 வயது உள்ளூர் ஆடவர் செலுத்திய Ford Ranger 2.0 ரக வாகனம் மூலம் ஏற்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

பாசீர் கூடாங்கில் இருந்து Setia Tropika-வை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த Ford Ranger 2.0 ரக வாகனம், 21 வயது ஆடவர் செலுத்திய Perodua Axia ரக காரில் மோதியது. இந்த விபத்தினால் சாலையை விட்டு விலகிய Ford Ranger 2.0 ரக வாகனம், எதிரே வந்த மேலும் சில வாகனங்களை மோதியதாக தெரியவந்துள்ளது.

இதில் மூவர் காயமுற்றனர். அனைவரும் சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து