வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்துவதற்கு வேலை வாய்ப்பு சந்தைகள் முக்கிய பங்காற்றுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.
வேலைச் சந்தையில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, அரசாங்கம் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும், மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் சமூகப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும் என்றும் கணபதிராவ் விவரித்தார்.
அந்த வகையில், மனிதவள அமைச்சின் ஆதரவோடு சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி மிகப்பெரிய அளவில் இன்று கிள்ளான், டேவான் ஹம்ஸாவில் நடைபெற்ற வேளையில், இந்த நிகழ்ச்சியில் 7000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிசெய்துள்ளதாக சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாட்டு ஆட்சிக்குழுவின் தலைருமான கணபதி ராவ் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


