Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இரு காவல்துறை அதிகாரிகளைக் கத்தியால் தாக்கினர்
தற்போதைய செய்திகள்

இரு காவல்துறை அதிகாரிகளைக் கத்தியால் தாக்கினர்

Share:

பேரங்காடி மையம் ஒன்றில் பொருட்களை களவாடியப் பின்னர் தப்பிக்க முயற்சித்த முதியவர் ஒருவரை பிடிக்கும் முயற்சியில் இரு போலீஸ்காரர்கள் கத்தி வெட்டு தாக்குதலுக்கு ஆளானார்கள். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணி அளவில் கூலிம் வட்டாரத்தில் உள்ள லோட்டஸ் பேராங்காடியில் நிகழ்ந்தது.

தப்பிக்க முற்பட்ட 82 வயது முதியவரை தடுத்து நிறுத்த அந்த இரு போலீஸ்காரர்கள் போராடிய போது இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சலே தெரிவித்தார்.

முதியவர் ஒருவர் பொருட்களை களவாடிக்கொண்டு அந்த பேரங்காடியிலிருந்து வெளியேறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 30 வயது மதிக்கத் தக்க அந்த போலீஸ்காரர்கள் அந்த முதியவரை தடுத்து நிறுத்த முனைந்ததாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தை கொண்ட போலீஸ் அதிகாரிக்கு நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள வேளையில் அவரை காப்பாற்ற முயற்சித்த டி 9 பிரிவைச் சேர்ந்த மற்றொரு போஸீஸ் அதிகாரி கால் பகுதியில் வெட்டுக்காயத்திற்கு ஆளானார்.

கைது செய்யப்பட்ட அந்த முதியவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!