பேரங்காடி மையம் ஒன்றில் பொருட்களை களவாடியப் பின்னர் தப்பிக்க முயற்சித்த முதியவர் ஒருவரை பிடிக்கும் முயற்சியில் இரு போலீஸ்காரர்கள் கத்தி வெட்டு தாக்குதலுக்கு ஆளானார்கள். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணி அளவில் கூலிம் வட்டாரத்தில் உள்ள லோட்டஸ் பேராங்காடியில் நிகழ்ந்தது.
தப்பிக்க முற்பட்ட 82 வயது முதியவரை தடுத்து நிறுத்த அந்த இரு போலீஸ்காரர்கள் போராடிய போது இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சலே தெரிவித்தார்.
முதியவர் ஒருவர் பொருட்களை களவாடிக்கொண்டு அந்த பேரங்காடியிலிருந்து வெளியேறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 30 வயது மதிக்கத் தக்க அந்த போலீஸ்காரர்கள் அந்த முதியவரை தடுத்து நிறுத்த முனைந்ததாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தை கொண்ட போலீஸ் அதிகாரிக்கு நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள வேளையில் அவரை காப்பாற்ற முயற்சித்த டி 9 பிரிவைச் சேர்ந்த மற்றொரு போஸீஸ் அதிகாரி கால் பகுதியில் வெட்டுக்காயத்திற்கு ஆளானார்.
கைது செய்யப்பட்ட அந்த முதியவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ரிட்சுவான் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


