Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் முதலைத் தாக்கி 12 வயது சிறுவன் பலி!
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் முதலைத் தாக்கி 12 வயது சிறுவன் பலி!

Share:

கூச்சிங், செப்டம்பர்.18-

சரவாக், சமரஹான் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலைத் தாக்கியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

முதலைத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாகவும், முதலைக் கடித்ததால் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்தன என்றும் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த போது, ஆற்றில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும், சில நிமிடங்களில் அது நின்று விட்டதாகவும், கம்போங் எம்பிலாவைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்