May 30, 2026
Thisaigal NewsYouTube
மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்
தற்போதைய செய்திகள்

மலையேற்றத்தில் மாயமான ஜஸ்லிந்தா சலுடின் விட்டுச் சென்ற குறிப்பு - தொடர்ந்து நீடிக்கும் மர்மம்

Share:

தாப்பா அருகேயுள்ள குனுங் பத்து புத்தே மலையில் மாயமான 49 வயதான ஜஸ்லிந்தா சலுடின், அம்மலையின் உச்சியை அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

மலையின் உச்சிப் பகுதியில், “ஹாஃபிஸ் அம்பிக் காம்பார் அக்கா டே சம்பாய்” அதாவது, ஹபிஸ், படம் எடுத்து நான் உச்சியை அடைந்துவிட்டேன் என்ற வாசகத்தை ஜஸ்லிந்தா எழுதி வைத்திருந்ததாக மலையேற்ற வழிகாட்டி ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.

மலையேற்றத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்லிந்தாவின் கைப்பேசி மின்கலம் காலியானதால், தான் உச்சியை அடைந்ததை தெரிவிக்கவே அவர் அந்தக் குறிப்பை எழுதி வைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 24-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஜஸ்லிந்தா மலை உச்சியை அடைந்திருக்கலாம் என்றும், தான் காலை 10.45 மணியளவில் அங்கு சென்றடைந்து, 11 மணியளவில் அந்த குறிப்பைக் கண்டதாகவும் ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.

என்றாலும், உச்சியை அடைந்த பிறகு அவர் எந்த பாதையில் சென்றார் அல்லது எங்கு சென்றார் என்பதற்கான எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாததால், கடந்த 1 வாரமாக நடைபெற்று வரும் தேடுதல் பணியில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.

Related News

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்

சபா, சரவாக் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த மதானி அரசாங்கம் உறுதி – பிரதமர் அன்வார்

நாடெங்கிலும் ஸ்தம்பித்த மைஐஎம்எம்எஸ் அமைப்பு: உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டுமென லிம் லிப் எங் வலியுறுத்து

நாடெங்கிலும் ஸ்தம்பித்த மைஐஎம்எம்எஸ் அமைப்பு: உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டுமென லிம் லிப் எங் வலியுறுத்து

பினாங்கில் விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 2  நாட்களுக்கு படகு சேவை இலவசம்

பினாங்கில் விசாக தினம், மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு படகு சேவை இலவசம்

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் கூரையில் பாய்ந்தது – 2 பேர் காயம்

மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்

மலேசியாவிற்கு கடற்படை தாக்குதல் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா பரிசீலனை - தற்காப்பு அமைச்சர் தகவல்

பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை

பள்ளிகளிலும் பரவி வரும் ‘ஜாம்பி போதை’ – போலீசார் கடும் எச்சரிக்கை