மாதுவை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வட்டித் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு சிபு உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது. அத்தம்பதியருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிக் கண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கணவனுக்கும், மனைவிக்கும் மரணத் தண்டனை விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி க்ரிஸ்தோபர் சுய் சூ யின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோலாலம்பூரை சேர்ந்த 41 வயது சொங் சியா மிங் மற்றும் சுபாங் ஜெயாவைச் சேர்ந்த அவரின் மனைவி 41 வயதுடைய சியொவ் பெய் சீ என்ற அந்த தம்பதியர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 10 மணியளவில் 38 வயது மாதுவை வெட்டிக்கொலை செய்து,உடல் அவயங்களை பயணப்பெட்டியில் வைத்து வீசிய விட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


