மாதுவை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வட்டித் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு சிபு உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது. அத்தம்பதியருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிக் கண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கணவனுக்கும், மனைவிக்கும் மரணத் தண்டனை விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி க்ரிஸ்தோபர் சுய் சூ யின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கோலாலம்பூரை சேர்ந்த 41 வயது சொங் சியா மிங் மற்றும் சுபாங் ஜெயாவைச் சேர்ந்த அவரின் மனைவி 41 வயதுடைய சியொவ் பெய் சீ என்ற அந்த தம்பதியர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 10 மணியளவில் 38 வயது மாதுவை வெட்டிக்கொலை செய்து,உடல் அவயங்களை பயணப்பெட்டியில் வைத்து வீசிய விட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


