Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பலுடன் தொடர்பு , அரசியல்வாதி மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பலுடன் தொடர்பு , அரசியல்வாதி மீது நடவடிக்கை

Share:

மலேசியாவில் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் சுமார் பத்து லட்சம் வெள்ளியை கொள்ளையடித்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒருமுன்னாள் அதிகாரி சம்பந்தப்பட்ட கொள்ளையில் ஓர் அரசியல்வாதியும், அவரின் மனைவியும் சம்பந்தப்பட்டுள்ளதாக கெப்போங் எம்.பி. லிம் லிப் இன்ஜி தெரிவித்தார்.

அந்த அரசியல்வாதி, தற்போது அரசியலில் தீவிரமாக இல்லை என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருக்கிறார் என்று லிம் லிப் இன்ஜி குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீன தொழில் அதிபரின் வழக்கறிஞருடன் கோலாலம்பூரில் இன்று கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் லிம் இதனை குறிப்பிட்டார்.

அந்த அரசியல்வாதியும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.

எனினும் அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்