பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை சீரமைப்பில், சில அமைச்சர்கள் விடுபடலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளையில் முன்பு அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த சில எம்.பி.க்கள், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கபபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவ்வட்டாரங்கள் குறிப்பட்டுள்ளன.
அமைச்சரவை மாற்றத்தை, பிரதமர், நாளை செவ்வாய்க்கிழமை காலையில் அறிவிப்பாரேயானால் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் இஸ்தானா நெகாராவில் பதவியேற்பு சடங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








